தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

 பாமகவினர் 80 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை

Updated On :11 மே 2013, 7:01 am

தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 237 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில், மேலும், 80 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதியும், 73 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 22ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் எனக் கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அன்புராஜ் ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.