தருமபுரி மாவட்டத்தில் கைதாகி ஜாமீன் கோரி விண்ணப்பித்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 80 பேரின் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 237 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகியுள்ளனர். இந்த நிலையில், மேலும், 80 பேர் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதில், 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 15ஆம் தேதியும், 73 பேரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 22ஆம் தேதியும் விசாரணை நடைபெறும் எனக் கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி அன்புராஜ் ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

